Dinamalar-Logo
Dinamalar Logo


தேரோட்டம்

தேரோட்டம்

தேரோட்டம்

ADDED : மார் 12, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் , கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக விழா துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு மூலவர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 10:00 மணிக்கு, சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உலா வந்தார். பக்தர்கள், 'ஓம் நமச்சிவாய' என பக்திப்பரவசத்துடன் முழங்கி, தேர் முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்துச் சென்றனர். மாலை 4:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், விழா ஏற்பாடு செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us