/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அத்தியூரில் தகராறு 9 பேர் மீது வழக்கு அத்தியூரில் தகராறு 9 பேர் மீது வழக்கு
அத்தியூரில் தகராறு 9 பேர் மீது வழக்கு
அத்தியூரில் தகராறு 9 பேர் மீது வழக்கு
அத்தியூரில் தகராறு 9 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 16, 2024 06:55 AM
ரிஷிவந்தியம்: அத்தியூரில் முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வாணாபுரம் அடுத்த அத்தியூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி குஷ்பு, 29; இவரது தம்பி பாண்டியன். அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தாம்மாள் மகள் கல்கி என்பவரை காதலித்து, கடந்த 10 தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
கோவிந்தம்மாள் மகன் சூர்யா என்பவர், குஷ்புவின் தங்கை கலைச்செல்வியை காதல் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
புகாரின் பேரில், கோவிந்தராஜ், சூர்யா, தீனா, குப்பன், முனியப்பிள்ளை, ராஜகோபால், கோவிந்தம்மாள், முனியம்மாள், தமிழ் ஆகிய 9 பேர் மீது பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.