Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 16, 2024 11:09 PM


Google News
திருக்கோவிலுார்: மணலுார் பேட்டை அருகே பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணலுார்பேட்டை அடுத்த காங்கியனுாரை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மனைவி அமுதா, 45. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 10ம் தேதி இளங்கோவன் அவரது உறவினர்களான கிருஷ்ணமூர்த்தி, ஜோதி, இளையராஜ் ஆகியோர் அமுதாவின் வீட்டிற்கு சென்று, அவரை திட்டி, தாக்கி மிரட்டல் பிடித்தனர்.

இதுகுறித்து அமுதா கொடுத்த புகாரின் பேரில், இளங்கோவன் உட்பட நான்கு பேர் மீது மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us