Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 04, 2024 12:29 AM


Google News
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே முன் விரோத தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 43; அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் வினோத், 30; இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் ராமச்சந்திரனின் தம்பி மாரியப்பன், 35; வினோத் வீட்டின் எதிரே தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை வினோத் மற்றும் அவரது அண்ணன்கள் பிரகாஷ், 41; கபிலன், 36; ஆகியோர் மாரியப்பனை தாக்கினர்.

காயம் அடைந்த மாரியப்பன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், வினோத், பிரகாஷ், கபிலன் ஆகியோர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us