Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விலங்குகள் மூலம் பரவும் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

விலங்குகள் மூலம் பரவும் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

விலங்குகள் மூலம் பரவும் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

விலங்குகள் மூலம் பரவும் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

ADDED : ஜூலை 08, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வில்லிவலம் கிராமத்தில் விலங்குகளால் மனிதனுக்கு பரவும் நோய்கள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஜி.அரியூர் வட்டார மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் செல்வி வரவேற்றார்.

துணைத் தலைவர் பூங்காவனம், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். காட்டுப் பையூர் கால்நடை உதவி மருத்துவர் சையத் அஷ்ரப் ஆகியோர் விலங்குகளால், மனிதனுக்கு பரவும் நோய்கள் பற்றியும், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கினர். நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்றனர்.

ஊராட்சி செயலாளர் முருகன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us