Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருவிழாவில் தகராறு ஒருவர் கைது

திருவிழாவில் தகராறு ஒருவர் கைது

திருவிழாவில் தகராறு ஒருவர் கைது

திருவிழாவில் தகராறு ஒருவர் கைது

ADDED : ஜூன் 12, 2024 11:51 PM


Google News
ரிஷிவந்தியம் : நுாரோலையில் கோவில் திருவிழாவில் லைட் செட்டிங் சரியாக போடவில்லை என கூறி, ஒருவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் குருசாமி,55; இவர் அதே கிராமத்தில் நடந்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் சீரியல் லைட்டுகளை கட்டியுள்ளார்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகன் ரகோத்,30; என்பவர் லைட் செட்டிங் சரியாக போடவில்லை என தெரிவித்து, டியூப் லைட்டுகளை உடைத்ததுடன், குருசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து ரகோத்தினை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us