ADDED : ஜூலை 08, 2024 05:06 AM
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முனுசாமி, 20; என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அதே ஊரில் ஏழுமலை, 43; என்பவரையும் கைது செய்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.