Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 23, 2024 11:29 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., ஆட்சியில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பேசினார்.

முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., ஆட்சியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பால் விலை, சொத்து வரி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டப்படுத்த தவறிய தி.மு.க., ஆட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் முன்னாள் எம்.பி.,காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, கதிர்.தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், பழனி, சேகர், சந்தோஷ், மணிராஜ், செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், எஸ்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, இளந்தேவன், மேலப்பட்டு ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, தகவல் தொழில்நுட்ப பிரிவு உமாசங்கர், பிற அணி செயலாளர்கள் சீனுவாசன், தங்கபாண்டியன், அய்யாக்கண்ணு, வினோத், ஜான்பாஷா, கிருஷ்ணமூர்த்தி, வெற்றிவேல், பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, நகர செயலாளர்கள் ஷியாம்சுந்தர், சுப்பு, ராகேஷ், துரை, நராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us