Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 294 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

294 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

294 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

294 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

ADDED : ஜூலை 22, 2024 07:52 PM


Google News
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சியில் 294 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

உளுந்துார்பேட்டை நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த அடையாள அட்டையைக் கொண்டு மத்திய அரசின் கடன் உதவி திட்டங்களை மானியத்தில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் தலைமை தாங்கி 294 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.

நகராட்சி கமிஷனர் இளவரசன், கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், மாலதி ராமலிங்கம், குமரவேல், ராஜேஸ்வரி சரவணன், விஜயபூபதி, கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us