ADDED : ஜூன் 16, 2024 06:47 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த மேலேரி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் வீரன் சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற சேஷசமுத்திரம் மணிகண்டன்,36; சக்கரவர்த்தி, 44; ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 25 லிட்டர் சாராயத்தை கைபற்றினார்.