ADDED : ஜூன் 03, 2024 04:46 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கெடிலம் கூட்டுரோடு அருகே பைக்கில் கஞ்சா விற்ற காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா, 27; என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா, கே.டி.எம்., பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், கொம்மசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற மணிகண்டன், 38; என்பவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.