Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/துாக்கு போட்டு பெண் தற்கொலை

துாக்கு போட்டு பெண் தற்கொலை

துாக்கு போட்டு பெண் தற்கொலை

துாக்கு போட்டு பெண் தற்கொலை

ADDED : ஜன 15, 2024 02:18 AM


Google News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே வயிற்று வலியால் பெண், துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரகண்டநல்லுார் அடுத்த வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ் மனைவி ராஜேஸ்வரி, 32; இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 12ம் தேதி இரவு 7:00 மணியளவில் ராஜேஸ்வரி வயிறு வலிப்பதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us