/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 30வது நாளாக காத்திருப்பு போராட்டம் விரக்தியில் போக்குவரத்து ஊழியர்கள் 30வது நாளாக காத்திருப்பு போராட்டம் விரக்தியில் போக்குவரத்து ஊழியர்கள்
30வது நாளாக காத்திருப்பு போராட்டம் விரக்தியில் போக்குவரத்து ஊழியர்கள்
30வது நாளாக காத்திருப்பு போராட்டம் விரக்தியில் போக்குவரத்து ஊழியர்கள்
30வது நாளாக காத்திருப்பு போராட்டம் விரக்தியில் போக்குவரத்து ஊழியர்கள்
ADDED : செப் 17, 2025 01:35 AM
ஈரோடு, ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், 30வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நேற்றும் தொடர்ந்தனர்.
கடந்த சட்டசபை தேர்தல் தி.மு.க., அறிவித்தபடி, போக்குவரத்து கழகம் மற்றும் ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த, 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்கி, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்.
குறைந்த பட்ச ஓய்வூதியத்தை, ஏழாவது ஊதியக்குழு அடிப்படையிலும், 15வது ஊதிய ஒப்பந்த அரியர்ஸ் வழங்க வலியுறுத்தினர். நேற்று, 30வது நாளாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தும், அதிகாரிகள், அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர்.