Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

ADDED : ஜூன் 07, 2024 12:10 AM


Google News
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், அப்பன் நகரை சேர்ந்தவர் தினேஷ், 31; தனியார் வங்கி ஊழியர்.

இவரை கத்தி முனையில் மிரட்டிய நான்கு பேர், 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.இது தொர்டபாக சூரம்பட்டி, நால்ரோடு பெரியார் நகர் விக்னேஷ் குமார், 26; ஈரோடு, ஸ்டோனி பிரிட்ஜ் பிரவீன் குமார், 26; கள்ளுக்கடைமேடு, ஈ.வி.ஆர்.வீதி தீபன், 23, ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மரப்பாலம், நேதாஜி சாலை விக்ரமை தேடி வருகின்றனர். கைதான மூவர் மீதும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us