Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/10, பிளஸ் 1 வகுப்புக்கான துணை தேர்வுகள் துவக்கம்

10, பிளஸ் 1 வகுப்புக்கான துணை தேர்வுகள் துவக்கம்

10, பிளஸ் 1 வகுப்புக்கான துணை தேர்வுகள் துவக்கம்

10, பிளஸ் 1 வகுப்புக்கான துணை தேர்வுகள் துவக்கம்

ADDED : ஜூலை 05, 2025 01:30 AM


Google News
ஈரோடு, தமிழகத்தில் பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனித்தேர்வர்களுக்கான துணை தேர்வு நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 துணை தேர்வுகள் எழுத, 2,620 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவானியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபியில் வைரவிழா மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலத்தில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி என, 4 மையங்களில் தேர்வுகள் நடந்தது.

தமிழ் தேர்வில், 384 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 252 பேர் எழுதினர். பத்தாம் வகுப்பு துணை தேர்வு ஏழு மையங்களில் தொடங்கியது. தமிழ் தேர்வுக்கு, 773 பேர் விண்ணப்பித்து, 477 பேர் எழுதினர். 296 பேர் பங்கேற்கவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us