Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இலவச வேட்டி, சேலைக்கான அரசாணை வெளியிட விசைத்தறியாளர் வேண்டுகோள்

இலவச வேட்டி, சேலைக்கான அரசாணை வெளியிட விசைத்தறியாளர் வேண்டுகோள்

இலவச வேட்டி, சேலைக்கான அரசாணை வெளியிட விசைத்தறியாளர் வேண்டுகோள்

இலவச வேட்டி, சேலைக்கான அரசாணை வெளியிட விசைத்தறியாளர் வேண்டுகோள்

ADDED : ஜூலை 11, 2024 12:02 AM


Google News
ஈரோடு: தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான அரசா-ணையை விரைவில் வெளியிட வேண்டும் என, விசைத்தறியா-ளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்-டமைப்பு சார்பில், அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த மூன்று மாதமாக நுால் விலை ஏற்ற, இறக்கமாகவும், மார்க்கெட்டில் இல்லாததாலும், நுால் கொள்முதல் விலையை விட, காட்டன் துணி, ரயான் துணி குறைந்த விலைக்கு விற்பனை-யாகிறது. இதனால், பெரும்பாலான விசைத்தறியில் உற்பத்தி நிறுத்தப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்-துள்ளனர். இலவச வேட்டி, சேலையை எதிர்பார்க்கும் விசைத்தறி-யாளர்கள் வேலை இன்றி நெருக்கடியில் உள்ளனர்.

கடந்த, 10 ஆண்டுகளாக ஜூன் முதல் வாரமே இலவச வேட்டி, சேலை உற்-பத்தி துவங்கி, தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும். தற்போது வரை எந்த நுால் மூலம், வேட்டி, சேலை உற்பத்தி செய்வது, எந்த கலர் கொடுப்பது என்ற முடிவு எடுக்கவில்லை. இதற்கு, அர-சாணை வெளியாகவில்லை என்கின்றனர். எனவே, அரசு விரை-வாக அரசாணை வெளியிட்டு, உற்பத்திக்கான முதற்கட்ட நுால் டெண்டர் பரிவர்த்தனையை துவங்கி, 1.68 கோடி வேட்டி, 1.73 கோடி சேலை உற்பத்தி பணிக்கான உத்தரவை வழங்க வேண்டும்.

விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம், உடனடி-யாக பணியை துவங்கினால் தான், டிசம்பர் இறுதிக்குள் பணியை முடித்து, பொங்கலுக்குள் வேட்டி, சேலையை மக்களுக்கு வழங்க தயார்படுத்த முடியும். பல லட்சம் நெசவாளர்கள் வேலை-வாய்ப்பு பெறுவர். எனவே, உரிய ஆணையை முதல்வர் வெளி-யிட்டு, பணியை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us