Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானம்

விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானம்

விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானம்

விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானம்

ADDED : ஜூன் 27, 2025 01:06 AM


Google News
பெருந்துறை, அரியலூர், வி.ஓ.சி. தெருவைச் சேர்ந்தவர் மஞ்சு,21. இவர், ஈரோட்டிலுள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கி, தனியார் கோச்சிங் சென்டரில் அரசு தேர்விற்காக படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 23 ம் தேதி ஈரோடு, வீரப்பனூரில் சாலையை கடக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மருத்துவமனையில் மருத்துவர்கள் மஞ்சுவை பரிசோதனை செய்தனர். அதில், அவர் மூளைச் சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் அனுமதியோடு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

அவரது கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கண்கள் தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us