கர்நாடக மது வாங்கி வந்த ஆசாமி கைது
கர்நாடக மது வாங்கி வந்த ஆசாமி கைது
கர்நாடக மது வாங்கி வந்த ஆசாமி கைது
ADDED : ஜூன் 21, 2024 07:40 AM
சத்தியமங்கலம்: கடம்பூர் போலீசார், கடம்பூரை அடுத்த சுஜில்கரை பகுதியில், நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டூவீலரில் வந்த சுஜில்கரையை சேர்ந்த தங்கவேல் என்பவரிடம், 192 பாக்கெட் கர்நாடக மாநில மதுபானம் இருந்தது. அதிக விலைக்கு விற்பதற்காக வாங்கி வந்தது தெரிந்தது. கைது செய்த போலீசார், மதுவுடன் டூவீலரை பறிமுதல் செய்தனர். இதேபோல் டாஸ்மாக் சரக்கை அதிக விலைக்கு விற்றதாக கோட்டமாளம் வெங்கிட்டையன், வரதராஜ் ஆகியோரை கைது செய்தனர்.