Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எல்.பி.பி.,வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

எல்.பி.பி.,வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

எல்.பி.பி.,வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

எல்.பி.பி.,வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

ADDED : ஜூலை 25, 2024 01:20 AM


Google News
சென்னிமலை: சென்னிமலை அருகே, பசுவபட்டி ஊராட்சி கீழ்பவானி வாய்க்காலின், 84-வது மைலில் சீர-மைப்பு பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், அரசாணையில் அறிவித்தபடி இல்லாமல் வாய்க்-காலின் இரு கரைகளிலும், 200 மீட்டர் துாரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைப்பதாக கூறி, 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று பணிகளை தடுத்து நிறுத்தினர். சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விவசாயிக-ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறு-கையில், 'பசுவபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, 84-வது மைலில் கீழ்பவானி வாய்க்காலின் இடது கரையில், 20 மீட்டர் நீளத்திற்கு மட்டும் பக்கவாட்டு கான்கிரீட் சுவர் அமைக்க அரசாணை உள்-ளது. ஆனால், 200 மீட்டர் நீளத்திற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இடது கரையில் அதிக துாரத்திற்கு சுவர் அமைத்தால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். வலது கரையில் சுவர் அமைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us