/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எல்.பி.பி.,வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்புஎல்.பி.பி.,வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
எல்.பி.பி.,வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
எல்.பி.பி.,வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
எல்.பி.பி.,வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
சென்னிமலை: சென்னிமலை அருகே, பசுவபட்டி ஊராட்சி கீழ்பவானி வாய்க்காலின், 84-வது மைலில் சீர-மைப்பு பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில், அரசாணையில் அறிவித்தபடி இல்லாமல் வாய்க்-காலின் இரு கரைகளிலும், 200 மீட்டர் துாரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைப்பதாக கூறி, 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று பணிகளை தடுத்து நிறுத்தினர். சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விவசாயிக-ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறு-கையில், 'பசுவபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, 84-வது மைலில் கீழ்பவானி வாய்க்காலின் இடது கரையில், 20 மீட்டர் நீளத்திற்கு மட்டும் பக்கவாட்டு கான்கிரீட் சுவர் அமைக்க அரசாணை உள்-ளது. ஆனால், 200 மீட்டர் நீளத்திற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இடது கரையில் அதிக துாரத்திற்கு சுவர் அமைத்தால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். வலது கரையில் சுவர் அமைப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,' என்றனர்.