ADDED : ஜூன் 01, 2025 01:26 AM
ஈரோடு, ஈரோடு காவிரி ரயில்வே ஸ்டேஷன் பாலம் அருகே, 60 வயது மதிக்கதக்க ஆண் சடலம் நேற்று காலை கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி பலியாகியுள்ளார். அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.