தாயால் மனவேதனை:மகன் விபரீத முடிவு
தாயால் மனவேதனை:மகன் விபரீத முடிவு
தாயால் மனவேதனை:மகன் விபரீத முடிவு
ADDED : டிச 01, 2025 03:19 AM
ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரம் ஈ.பி.பி.நகரை சேர்ந்த ராஜா மகன் வெங்கடேஸ், 23; இவர் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் மது பழக்கத்துக்கு அடிமையானார். ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
கடந்த, 29ல் வெங்கடேஸ் அறை உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. சகோதரர் சென்று பார்த்தபோது துாக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


