/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
ADDED : ஜூன் 14, 2025 07:11 AM
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பாரத், 20; கடந்த, 2014 மார்ச் மாதம், பைக்கில் சத்தி சாலையில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் பலத்த காயம-டைந்தார். கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குடும்பத்தார் நஷ்டயீடு வழங்க கோரி, கோபி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்-தனர். கடந்த, 2019ல் செப்.,18ல் அப்போதைய நீதிபதி புஷ்ப-ராணி, 14.95 லட்சம் ரூபாய் நஷ்டயீடு வழங்க உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், 2020 செப்.,7ல் கட்-டளை நிறைவேற்று மனுத்தாக்கல் செய்தனர். அதன் பிறகும் செலுத்தவில்லை.
இந்நிலையில் கடந்த ஏப்., 9ல் வழக்கு விசாரணைக்கு வந்த-போது, சார்பு நீதிமன்ற நீதிபதி ஜீவா பாண்டியன், விபத்துக்கு காரணமான அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைய-டுத்து கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பூர் செல்ல தயாராக இருந்த, அரசு மப்சல் பஸ்சை நீதிமன்ற பணியாளர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.