Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈங்கூர் இந்துஸ்தான் கல்லுாரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

ஈங்கூர் இந்துஸ்தான் கல்லுாரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

ஈங்கூர் இந்துஸ்தான் கல்லுாரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

ஈங்கூர் இந்துஸ்தான் கல்லுாரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

ADDED : ஜூன் 28, 2025 07:47 AM


Google News
ஈரோடு : ஈரோடு, ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில், முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. முனைவர் கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்துஸ்தான் கல்வி நிறுவன இணை செயலாளர் நிர்வாகத்தினர், இந்துஸ்தான் அறிவியல் வணிகவியல் கல்லுாரி முதல்வர், சிறப்பி விருந்தினர் ஆகியோர், குத்து விளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர். பெற்றோர் நிலை, மாணவர்களின் எண்ணப்போக்கு சார்ந்து கவிதாசன் பேசினார்.

இதை தொடர்ந்து பெற்றோர்களுக்கான சிறப்பு உளவியல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கோவை உளவியல் நிபுணர் ஆக்னஸ் பெபியோலா, இன்றைய சூழலில் இளைஞர்களை கையாளும் விதம் குறித்து விளக்கி, பெற்றோரிடம் கலந்துரையாடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிகழ்வில் மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் பேராசிரியர் என, 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us