ADDED : ஜூன் 08, 2025 12:54 AM
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள கொமராயனுார் கூப்புக்காட்டை சேர்ந்தவர் கணேசன், 71; கூலி தொழிலாளி. சென்னம்பட்டி வனசரத்தில் எதிர்மறை சராகம் பகுதியில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டார்.
மாலையில் வீடு திரும்பியபோது, யானை தாக்கி படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.