Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதை ஊசி; இருவர் கைது

போதை ஊசி; இருவர் கைது

போதை ஊசி; இருவர் கைது

போதை ஊசி; இருவர் கைது

ADDED : ஜூலை 02, 2025 01:33 AM


Google News
காங்கேயம், காங்கேயம், பெருமாள்மலை அருகே, இருவர் போதை ஊசி போட்டுக் கொள்வதாக, காங்கேயம் போலீசுக்கு தகவல் போனது. போலீசார் இருவரை அழைத்து சென்று விசாரித்தனர். சிவன்மலை, சரவணநகர், சூரிய பிரகாஷ், 22, டைல்ஸ் கம்பெனி தொழிலாளி.

காங்கேயம், பழையகோட்டை ரோடு கவின்குமார், 28, மில் தொழிலாளி என்பது தெரிந்தது. ஈரோட்டில் ஒரு மருந்து கடையில் மாத்திரை வாங்கி தண்ணீரில் கரைத்து, சிரிஞ்சில் ஏற்றிக்கொண்டதாக தெரிவித்தனர். இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us