தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்
தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்
தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்
ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
ஈரோடு : மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்துஎஸ்.பி.,க்கு முன்னதாகவே தகவல்களை தெரிவித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகளை, எஸ்.பி.,யின் சிறப்பு தனிப்பிரிவு போலீசார் செய்து வருகின்றனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பவானி ஸ்டேஷன் முதல் நிலை காவலர் மனோ - பவானி தனிப்பிரிவிலும், அந்தியூர் செந்தில்குமார் - ஆப்பக்கூடல் தனிப்பிரிவுக்கும், வெள்ளித்திருப்பூர் ஸ்டேஷன் ராஜா - அந்தியூர் ஸ்டேஷன் தனிப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.பர்கூர் சேகர் - அதே ஸ்டேஷன் தனிப்பிரிவு ஏட்டாகவும், வெள்ளித்திருப்பூர் தினேஷ்குமார் - அதே ஸ்டேஷன் தனிப்பிரிவுக்கும், கோபி ஸ்டேஷன் கண்ணன் - அம்மாபேட்டை தனிப்பிரிவுக்கும், அம்மாபேட்டை சந்தோஷ்குமார் - சித்தோடு தனிப்பிரிவுக்கும், பவானி ஸ்டேஷன் சக்திவேல் - எஸ்.பி., அலுவலகத்துக்கும், சென்னிமலை பாலசுப்பிரமணியன் - எஸ்.பி., அலுவலகத்துக்கும் மாற்றம் செய்து எஸ்.பி., ஜவகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.