Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 11, 2024 04:22 AM


Google News
சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, ஜல்லி கிரசர் நிறுவ-னத்தில் பணம் கேட்டு மிரட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்-சியை சேர்ந்த பிரமுகர் உட்பட, ஐந்து பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை அருகே பனியம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மகேஸ்-வரி, 48, அதே பகுதியில் ஜல்லி கிரசர் நடத்தி வருகிறார். இந்த கிரசர் நிறுவனத்துக்கு, கொங்கம்பாளையத்தை சேர்ந்த வி.சி. நிர்-வாகி சுப்பிரமணி மற்றும் அவருடன் வந்தவர்கள் காரில் சென்-றுள்ளனர். அங்கு கிரசரில் இருந்து எந்த வாகனமும் வெளியே வராதபடி, காரை நிறுத்தியதாக தெரிகிறது. மேலும், அந்நிறுவ-னத்தில் இருந்த பெண் ஊழியரிடம் சுப்பிரமணி மற்றும் அவ-ருடன் சென்றவர்கள், குவாரிக்கு லைசன்ஸ் உள்ளதா, அதை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், அந்த பெண் ஊழியரிடம் இவர்கள் பணம் கேட்டதுடன், தொழில் செய்ய முடி-யாமல் தடை ஏற்படுத்தி விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்-ததாக தெரிகிறது.

இதையடுத்து, கிரசர் உரிமையாளர் மகேஸ்வரி, ஐந்து பேர் மீது கொடுத்த புகார்படி, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பணியாளரிடம், பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us