/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்குகிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு
கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு
கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு
கிரசர் நிறுவனத்தில் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2024 04:22 AM
சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, ஜல்லி கிரசர் நிறுவ-னத்தில் பணம் கேட்டு மிரட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்-சியை சேர்ந்த பிரமுகர் உட்பட, ஐந்து பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை அருகே பனியம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மகேஸ்-வரி, 48, அதே பகுதியில் ஜல்லி கிரசர் நடத்தி வருகிறார். இந்த கிரசர் நிறுவனத்துக்கு, கொங்கம்பாளையத்தை சேர்ந்த வி.சி. நிர்-வாகி சுப்பிரமணி மற்றும் அவருடன் வந்தவர்கள் காரில் சென்-றுள்ளனர். அங்கு கிரசரில் இருந்து எந்த வாகனமும் வெளியே வராதபடி, காரை நிறுத்தியதாக தெரிகிறது. மேலும், அந்நிறுவ-னத்தில் இருந்த பெண் ஊழியரிடம் சுப்பிரமணி மற்றும் அவ-ருடன் சென்றவர்கள், குவாரிக்கு லைசன்ஸ் உள்ளதா, அதை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், அந்த பெண் ஊழியரிடம் இவர்கள் பணம் கேட்டதுடன், தொழில் செய்ய முடி-யாமல் தடை ஏற்படுத்தி விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்-ததாக தெரிகிறது.
இதையடுத்து, கிரசர் உரிமையாளர் மகேஸ்வரி, ஐந்து பேர் மீது கொடுத்த புகார்படி, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பணியாளரிடம், பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.