Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிவன்மலை வீரக்காளியம்மன் கோவிலில் பாலாலய பூஜை

சிவன்மலை வீரக்காளியம்மன் கோவிலில் பாலாலய பூஜை

சிவன்மலை வீரக்காளியம்மன் கோவிலில் பாலாலய பூஜை

சிவன்மலை வீரக்காளியம்மன் கோவிலில் பாலாலய பூஜை

ADDED : ஜூலை 11, 2024 12:22 AM


Google News
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், சிவன்மலை, மலை அடிவாரத்தில் வீரகாளி-யம்மன் கோவில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாகவும், தை மாதம் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். பழமையான கோவில் என்பதால், சுற்றுப்புற சுவர்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்பட்டதையடுத்து, அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் இணைந்து, நேற்று காலை திருப்பணிகள் துவங்க சிவன்மலை, காட்டூர், குருக்கத்தி, நீலக்காட்டுப்புதூர், பள்ளக்காட்டுப்புதூர், ஒட்-டப்பாளையம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் பாலாலயம் செய்தனர். சிவன்மலை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்-தினாம்பாள், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி, அரு-ணாச்சாரியார், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us