/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வனத்தில் யானை தாக்கி மீன்பிடி தொழிலாளி பலி வனத்தில் யானை தாக்கி மீன்பிடி தொழிலாளி பலி
வனத்தில் யானை தாக்கி மீன்பிடி தொழிலாளி பலி
வனத்தில் யானை தாக்கி மீன்பிடி தொழிலாளி பலி
வனத்தில் யானை தாக்கி மீன்பிடி தொழிலாளி பலி
ADDED : ஜூலை 11, 2024 01:48 AM
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. பவானிசாகர் வனத்தையொட்டி சுஜ்ஜில்குட்டை, துாரா மொக்கை கிராமத்தில் வசிக்கும் மக்கள் விவசாய பணிகளோடு, மீன் பிடிக்கும் தொழிலிலும் செய்கின்றனர். துாரா மொக்கை பகுதியைச் சேர்ந்த மீன் பிடிக்கும் தொழிலாளி கனகராஜ், 44, என்பவர், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை ஒட்டியுள்ள, விவசாய நில குடிசையில் துாங்கிக் கொண்டிருந்தார்.
வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு வெளியேறிய ஒற்றை யானை, குடிசை வீட்டின் அருகே வந்தது. அதைப் பார்த்த கனகராஜ், கூச்சலிடுவதற்குள் யானை அவரை துரத்தி, தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.
படுகாயமடைந்த கனகராஜை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விளாமுண்டி வனத்துறையினர் விசாரிக்கின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன், இதே பகுதியில் தர்பூசணி பயிருக்கு காவல் காத்திருந்த விவசாயியை, ஒற்றை யானை தாக்கிக் கொன்றது.