Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானி ஆற்றில் கலக்கும் உள்ளாட்சி, ஆலை கழிவு தடுக்க நடவடிக்கை கோரி முறையீடு

பவானி ஆற்றில் கலக்கும் உள்ளாட்சி, ஆலை கழிவு தடுக்க நடவடிக்கை கோரி முறையீடு

பவானி ஆற்றில் கலக்கும் உள்ளாட்சி, ஆலை கழிவு தடுக்க நடவடிக்கை கோரி முறையீடு

பவானி ஆற்றில் கலக்கும் உள்ளாட்சி, ஆலை கழிவு தடுக்க நடவடிக்கை கோரி முறையீடு

ADDED : ஜூன் 20, 2025 01:28 AM


Google News
ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபி கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதி, தமிழக முதல்வர், நீர் வளத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், ஈரோடு கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சிகள், 12 டவுன் பஞ்.,கள், 44 பஞ்.,க்கள் வழியாக செல்லும் பவானி ஆற்றில், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. தண்டனைக்குரிய குற்றம் என அறிந்தும் செயல்படுத்துகின்றனர். தவிர தொழிற்சாலை, வியாபார நிறுவனங்கள், வணிக வளாகங்களும் கழிவு நீரை கலக்கின்றனர். இருபோக பாசன நிலங்கள், விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை தடை செய்து சட்டமுள்ளது. ஆற்றுப்படுகை நிலங்கள், நஞ்சை நிலங்கள், அரசின் பாசன நிலங்கள், விவசாயம் அல்லாத வீட்டுமனை, பிற பயன்பாட்டுக்கு வைத்துள்ளதை கூட்டு தணிக்கை செய்து அவற்றின் அனுமதி மறுப்பை உறுதி செய்ய வேண்டும்.

பவானி ஆற்றில், 16 கூட்டு குடிநீர் திட்டங்கள், 46 தனி குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும், 30 கோடி லிட்டர் நீரை மக்களுக்கு வினியோகிக்கின்றனர். காளிங்கராயன் அணை, கொடிவேரி அணை, கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட பகுதியில், 3 லட்சம் ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பயன் பெறுகின்றன. இச்சூழலில் பவானி ஆற்றில் மாசு, கழிவு நீர், திடக்கழிவு கலப்பதை தடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சில ஆலைக்கழிவு மிகவும் ஆபத்தானவை என அறிந்தும், கண்டு கொள்ளாமல் உள்ளனர். தென்னிந்தியாவின் முதல், 3 மாசடைந்த ஆறுகளில் ஒன்றாக பவானி ஆறு மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us