Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ADDED : ஜூலை 05, 2024 12:45 AM


Google News
ஈரோடு: ஈரோடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 10.98 லட்சம் ரூபாய் கைப்பற்-றப்பட்டது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஐந்தாவது மாடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் இயங்குகிறது. இங்கு உதவி செயற்-பொறியாளராக, ஊரக வளர்ச்சி துறை கோபி அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் மோகன் பாபு, 45, கூடுதல் பொறுப்-பாக கவனிக்கிறார். கோபியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர் கோவையை சேர்ந்தவர். ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சி பணிகளை, அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, கமிஷன் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது.இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராஜேஸ் தலை-மையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில், நேற்று மாலை அதிரடி சோத-னையில் ஈடுபட்டனர். இதில், 10 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது. மோகன் பாபுவிடம் இருந்து, 58 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்-பற்றப்பட்டது. இதுதொடர்பாக மோகன்பாபு மீது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us