Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பூக்கள் ஏற்றிச்சென்ற வாகனம் மொபட் மீது மோதி 2 பேர் பலி

பூக்கள் ஏற்றிச்சென்ற வாகனம் மொபட் மீது மோதி 2 பேர் பலி

பூக்கள் ஏற்றிச்சென்ற வாகனம் மொபட் மீது மோதி 2 பேர் பலி

பூக்கள் ஏற்றிச்சென்ற வாகனம் மொபட் மீது மோதி 2 பேர் பலி

ADDED : செப் 20, 2025 02:05 AM


Google News
புன்செய்புளியம்பட்டி, கோவை, கனுவக்கரையை சேர்ந்தவர் ஓதியப்பன், 65; புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள ஆலபாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன், 63; நண்பர்களான இருவரும் நேற்று காலை சுசுகி அக்செஸ் மொபட்டில் புன்செய் புளியம்பட்டிக்கு உரம் வாங்க வந்தனர். உரம் வாங்கிக்கொண்டு மத்திய கூட்டுறவு வங்கி அருகே சாலையை கடந்தனர்.

அப்போது கோவைக்கு பூக்கள் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் வந்த பிக்-அப் வாகனம் மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் ஓதியப்பன் சம்பவ இடத்தில் பலியானார். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரப்பன் இறந்தார். புன்செய் புளியம்பட்டி போலீசார் டிரைவர் கார்த்திக் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us