Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொட்டால் தொகை கொட்டும் என்று ரூ.12.71 லட்சம் பறித்த 2 பேர் கைது

தொட்டால் தொகை கொட்டும் என்று ரூ.12.71 லட்சம் பறித்த 2 பேர் கைது

தொட்டால் தொகை கொட்டும் என்று ரூ.12.71 லட்சம் பறித்த 2 பேர் கைது

தொட்டால் தொகை கொட்டும் என்று ரூ.12.71 லட்சம் பறித்த 2 பேர் கைது

ADDED : ஜூன் 04, 2025 01:02 AM


Google News
ஈரோடு, ஈரோடு, கதிரம்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார், 30; டெலிகிராம் மூலம் இருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதில் ஒரு லிங்க்கை அனுப்பி, அதை தொட்டால் பணம் கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளனர். அதன்படி லிங்க்கை தொட்ட போதெல்லாம், சிறு தொகை கிடைத்தது. இதை நம்பி, 12.௭௧ லட்சம் ரூபாய் அனுப்பிய நிலையில், அதன் பின் பணம் வரவில்லை.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நந்தகுமாரை ஏமாற்றி பணம் பறித்த, தர்மபுரி மாவட்டம் குப்பூரை சேர்ந்த சண்முகம், 43, சுதாகர், 44, ஆகியோரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us