ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பதிவானது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கோபியில்-18.2 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் கவுந்தப்பாடி-17.2, எலந்தைகுட்டைமேடு-14.6, பவானி-14.2, வரட்டுப்பள்ளம்-13.2, கொடிவேரி-8.2, பெருந்துறை-8, குண்டேரிபள்ளம்-7.4, அம்மாபேட்டை-6, சத்தியில்-2 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில் மதியம், 2:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டமாக மாறியதால், வெயில் தாக்கம் குறைந்தது.