ADDED : ஜூன் 11, 2024 06:05 AM
ஈரோடு : அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க கோட்ட தலைவர் அருண் குமார் தலைமையில், 37 ஆண்கள், 3 பெண்கள் என, 40 பேர் பங்கேற்றனர். 10 மணி நேரத்துக்கு மேல் பணி செய்ய மாட்டோம். 46 மணி நேர ஓய்வை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். 2 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இரவு பணி செய்ய உத்தரவிட கூடாது. 48 மணி நேரத்துக்குள் பணிக்கு கிளம்பும் இடத்துக்கு ரயில் டிரைவர்கள் திரும்பி வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.