ADDED : ஜூலை 05, 2024 02:55 AM
பவானி:அம்மாபேட்டையை
அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் வினிதா, 26;
அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை கடை திறக்க
வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று
பார்த்தபோது, 70 ஆயிரம் ரூபாய், மளிகை பொருட்கள் திருட்டு போனது
தெரிந்தது. புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், கைவரிசை காட்டிய
ஆசாமிகளை தேடி வருகின்றனர்.