ADDED : ஜூன் 24, 2024 03:04 AM
ஈரோடு;கன்னியாகுமரி, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில், அன்னாசிபழம் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தின் தேவைக்காக, கேரளாவில் இருந்தும் தருவிக்கப்படுகிறது. ஈரோடு மார்க்கெட்டுக்கு, கேரளாவில் இருந்து அன்னாசி பழம் வரத்தாகிறது. மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ, 25 ரூபாய்க்கு விற்ற அன்னாசி பழம், 40 ரூபாயாக தற்போது உயர்ந்து விட்டது.