/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தப்படுத்தும் பணி தீவிரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 18, 2024 12:11 AM

ஈரோடு : தமிழகத்தில் பல பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால், வாந்தி, பேதி ஏற்பட்டு, 20 நாட்களில் ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கலப்பதும், குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காததுமே பாதிப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
இதன் எதிரொலியாக, ஈரோடு மாநகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சிறிய அளவிலான, 'சின்டெக்ஸ்' தொட்டிகளை துாய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கலெக்டர் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 64 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 220 சின்டெக்ஸ் தொட்டிகளை துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இன்னும் இரு நாட்களில் பணி நிறைவு பெறும்.
இது தவிர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை துாய்மை செய்யவும், நீரேற்றம் செய்யும்போது குளோரினேஷன் செய்யவும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினர்.