ADDED : ஜூலை 20, 2024 07:09 AM
ஈரோடு : நாமக்கல்
மாவட்டம் பள்ளிபாளையம், ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 47;
இவரது மனைவி தாமரைசெல்வி.
இவர் டெய்லராக பணி செய்கிறார்.
கருங்கல்பாளையத்தில் தனியார் காஸ் கம்பெனி குடோனில் எட்டு மாதங்களாக
விஸ்வ-நாதன் ஸ்டோர் கீப்பராக பணி செய்து வந்தார். சிலிண்டர் எண்-ணிக்கை
கணக்கு தொடர்பாக பிரச்னை இருந்தது. நேற்று முன்-தினம் வேலைக்கு வந்த
விஸ்வநாதன், குடோன் ஓய்வறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கருங்கல்-பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.