Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி

ADDED : ஜூலை 26, 2024 02:51 AM


Google News
ஈரோடு: ஈரோடு, முத்தம்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணி மனைவி பார்-வதி, 75; கட்டட வேலை உள்ளதா என கேட்பதற்காக, கட்டட மேஸ்திரியை பார்க்க, நேற்று காலை, 8:30 மணியளவில் சூளை பஸ் நிறுத்த பகுதியில் சாலையை கடக்க முற்பட்டார். அப்போது அதிவேகமாக வந்த பஜாஜ் பல்சர் பைக் மூதாட்டி மீது மோதி-யது.

இதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தவரை, அப்பகுதி-யினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். பைக்கை ஓட்டி வந்த ஈரோடு, கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தமிமுன் அன்சாரி அலி, 32, மீது, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us