ADDED : ஜூலை 26, 2024 02:51 AM
ஈரோடு: நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை, அரசு ஊழியர் என அறி-வித்து கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசாணை 152 மற்றும் அரசாணை 10ல் விடுபட்ட பணியிடங்களை வழங்க வேண்டும்.
ஆய்வுக் கூட்டங்களை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நடத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாநகராட்சி அலுவ-லக ஊழியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து, நேற்று பணிபுரிந்-தனர். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் மற்றும் பணி-யாளர் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார்.