Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் விழா கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் விழா கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் விழா கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் விழா கொடியேற்றம்

ADDED : ஜூலை 30, 2024 03:29 AM


Google News
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை முதல் பங்குனி வரை, 12 மாதங்களும் உற்சவங்கள் நடக்கும். அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் நேற்று காலை, சிவாச்சாரியர் வேத மந்திரங்கள் முழங்க, கொடி-யேற்ற விழா நடந்தது. இதையொட்டி, விநாயகர் மற்றும் உற்-சவர் பராசக்தி அம்மன், அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா நடக்கும், 10 நாட்களும் தினமும் காலை, மாலை பராசக்தி அம்மன், மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நிறைவு நாளான, 10 நாள் விழாவில், ஆக., 7ல் மாலை கோவில் வளாகத்திலுள்ள சிவகங்கை தீர்த்த குளக்கரையிலுள்ள, வளை-காப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி, பக்தர்க-ளுக்கு அருள்பாலிப்பார். பின்னர், பராசக்தி அம்மனுக்கு வளை-காப்பு உற்சவம், இரவு அம்மன் வீதி உலா, இரவு, 10:00 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன், தீமிதி விழா நடக்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us