Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கைத்தறி சேலை கடையில் திருடிய 3 வாலிபர் கைது

கைத்தறி சேலை கடையில் திருடிய 3 வாலிபர் கைது

கைத்தறி சேலை கடையில் திருடிய 3 வாலிபர் கைது

கைத்தறி சேலை கடையில் திருடிய 3 வாலிபர் கைது

ADDED : ஜூலை 29, 2024 01:27 AM


Google News
பவானிசாகர்: பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ. கைத்தறி பட்டு சேலை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வருகிறார். கடந்த, 2ம் தேதி இரவு கடையில் வியாபாரம் பார்த்த வகையில், 2 லட்சம் ரூபாயை வைத்து சென்றார். மறுநாள் காலை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம், 18 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. சத்தி டி.எஸ்.பி.,சரவணன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்-கப்பட்டு ஆசாமிகளை தேடி வந்தனர்.

இது தொடர்பாக புன்செய் புளியம்பட்டி, புங்கம்பள்ளி கார்த்தி, 31; கோவை, மாதம்பட்டி சரவணன், 35; கோவை, கணப-தியை சேர்ந்த ஹரிபிரசாத், 27, ஆகியோரை கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய கார், 18 பவுன் நகை, ௧.௫௦ லட்சம் ரூபாயை மீட்டனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us