Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

ADDED : ஜூலை 19, 2024 01:38 AM


Google News
பவானி: சித்தோடு அருகே ஆம்னி பஸ் தீயில் எரிந்து சேதமான நிலையில், 15 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து கோவைக்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று அதி-காலை புறப்பட்டது. சென்னையை சேர்ந்த கார்த்திக், 43, ஓட்-டினார்.

சித்தோடு அருகில், சத்தி ரோடு பாலம் அருகே நேற்று அதி-காலை, 4:40 மணிக்கு வந்தபோது, இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் டிரைவர் உடனடியாக பஸ்சை சாலை-யோரம் நிறுத்தினார். பஸ்ஸில் இருந்த, 15 பயணிகளையும் உட-மைகளுடன் வெளியேற அறிவுறுத்தினார்.

அவர்கள் சற்றே பதற்றத்துடன் வெளியேறி கொண்டிருந்த-போதே, கரும்புகை சூழ்ந்து பஸ் எரிய தொடங்கியது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடு-பட்டனர். ஆனாலும், 80 சதவீத பஸ் எரிந்து சேதமடைந்தது.

தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலையில், ஆம்னி பஸ் தீப்பி-டித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சித்தோடு போலீசார்

விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us