Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புதிதாக 15 அரசு பஸ்கள் இயக்கம் துவக்கி வைப்பு

புதிதாக 15 அரசு பஸ்கள் இயக்கம் துவக்கி வைப்பு

புதிதாக 15 அரசு பஸ்கள் இயக்கம் துவக்கி வைப்பு

புதிதாக 15 அரசு பஸ்கள் இயக்கம் துவக்கி வைப்பு

ADDED : ஜூலை 18, 2024 01:22 AM


Google News
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் - ஈரோடு மண்டலம் சார்பில் புதிதாக வாங்கப்பட்ட, 15 பஸ்களின் இயக்க துவக்க நிகழ்ச்சி நடந்தது.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, புதிய பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைத்தார். மண்டல பொது மேலாளர் சொர்ணலதா வர-வேற்றார். நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ், கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பஸ்களில், ஈரோடு - குமுளி - 1, ஈரோடு - மைசூரு - 7, கோவை - மைசூரு (சத்தி, சாம்ராஜ் நகர் வழி) - 3, அந்தியூர் - கம்பம் -1, அந்தியூர் - நாகர்கோவில் - 2, கோபி - பங்களா-புதுார், 4 ரோடு வழியாக சத்தி என நகர் பஸ் - 1 என, 15 வழித்-தடங்களில் இயக்கப்படுகிறது.

ஈரோடு மண்டலத்தில் கடந்த, 2021 முதல் தற்போது வரை, 45 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, என அதிகாரிகள் தெரிவித்-தனர்.

எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோவன், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், எஸ்.பி., ஜவகர், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us