/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விட்டாச்சு' 'மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விட்டாச்சு'
'மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விட்டாச்சு'
'மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விட்டாச்சு'
'மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விட்டாச்சு'
ADDED : ஜூலை 18, 2024 01:23 AM
ஈரோடு: ஈரோட்டில், 15 புதிய அரசு பஸ்கள் இயக்கத்தை, வீட்டு
வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். தலைமை வகித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நிருபர் க-ளிடம் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பஸ்-களை மாற்றி, புதிய பஸ்கள் வாங்கி, லோக்சபா தேர்தலுக்கு முன், 1,000 பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்தலுக்குப்பின், தர்மபு-ரியில், 11 பஸ்களை முதல்வர் இயக்கி வைத்தார். பின், திருவள்-ளூரில், 10 பஸ்களை இயக்கினார். இன்று (நேற்று) காலை, கோவையில், 20 புதிய பஸ்களும், ஈரோட்டில், 15 புதிய பஸ்-களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் மட்டும், 300 புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். 500 மின்சார பஸ்கள் வாங்க முதல்வர் உத்தர-விட்டுள்ளார். 100 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் நடவடிக்கை முடிந்த பின், சென்னையில் அந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.