/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாமனாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மருமகன் மாமனாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மருமகன்
மாமனாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மருமகன்
மாமனாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மருமகன்
மாமனாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மருமகன்
ADDED : ஜூலை 04, 2024 08:45 AM
காங்கேயம் : காங்கேயம் அருகே குடும்ப பிரச்னையில் மாம-னாரை கத்தியால் குத்தி விட்டு, மருமகன் தப்பி-யோடினார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பச்சா-பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி, 59. சிவன்-மலை சுப்ரமணியசாமி கோவிலில் ஊழியராக பணிபுரிகிறார். வேலுசாமியின் மகள் நிவேதா-விற்கும், 28, வள்ளியரச்சல் பகுதியில் உள்ள பிர-பாகரன், 38, என்பவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு, 10 வயதில் ராஜசூர்யா என்ற மகன் உள்ளார்.
பிரபாகரனுக்கு குடி பழக்கம் இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளாக நிவேதா, பிரபா-கரன் இடையே தகராறு இருந்துள்ளது.
இந்நி-லையில், கடந்த சில மாதங்களாக அவரது மக-னுடன் தந்தை வீட்டில் நிவேதா வசித்து வந்-துள்ளார். நேற்று காலை, 8:30 மணிக்கு மாமனார் வீட்டிற்கு சென்ற பிரபாகரன், மனைவியை தன்-னுடன் அனுப்பி வைக்க கோரி தகராறில் ஈடுபட்-டுள்ளார். குடி பழக்கத்தை கைவிட்டால் மட்டுமே, மகள் வருவார் என வேலுசாமி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபா-கரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலுசாமியின் கழுத்தில் சரமாரியாக குத்தி-யுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனும-தித்தனர்.தலைமறைவான பிரபாகரனை காங்கேயம் போலீசார் தேடி வருகின்றனர்.