Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ADDED : ஜூலை 26, 2024 02:38 AM


Google News
ஈரோடு: ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், எஸ்.ஐ., மூர்த்தி தலைமையி-லான போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பி.பெ.அக்ர-ஹாரம் சத்தி பிரிவு சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடு-பட்டனர்.

அப்போது வந்த ஒரு வேனில், 15 மூட்டைகளில், 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். வேன் டிரைவரிடம் விசாரித்ததில், ஈரோடு, கருங்கல்பாளையம், செங்-குட்டுவன் வீதியை சேர்ந்த சுப்ரமணி, 36, என்பது தெரிந்தது. மக்-களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, ஆர்.என்.புதுாரில் தங்கி வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டார். சுப்ரமணியை போலீசார் கைது செய்து, வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us