598 டன் விதைகளை முடக்கிய அதிகாரிகள்
598 டன் விதைகளை முடக்கிய அதிகாரிகள்
598 டன் விதைகளை முடக்கிய அதிகாரிகள்
ADDED : ஜூலை 20, 2024 07:18 AM
தாராபுரம் : தாராபுரம் அருகே தரமில்லாத, ௫௯௮ டன் நெல் விதைகளை அதி-காரிகள் முடக்கினர்.
தாராபுரம் வட்டாரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட விதை விற்-பனை நிலையம் செயல்படுகிறது. இதில் நெல் விதை உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களும் அடக்கம். விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வாளர்கள், விதை மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி தரத்தை உறுதி செய்வர். இவ்-வாறு பகுப்பாய்வு செய்யப்பட்டதில், தரம் குறைந்த விதைகளை கண்டறிந்தனர்.
இதையடுத்து, நஞ்சியம்பாளையத்தில் ஒரு விதை நிறுவ-னத்தில், 598 டன் எடையுள்ள நெல் விதைகளை, ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று முடக்கம் செய்தனர்.