/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு ஐ.டி.ஐ.,க்களில் 15 வரை நேரடி சேர்க்கை அரசு ஐ.டி.ஐ.,க்களில் 15 வரை நேரடி சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,க்களில் 15 வரை நேரடி சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,க்களில் 15 வரை நேரடி சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,க்களில் 15 வரை நேரடி சேர்க்கை
ADDED : ஜூலை 03, 2024 02:41 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் உள்ள, இரண்டு அரசு மற்றும் 11 தனியார் ஐ.டி.ஐ.,க்களில் அரசு
ஒதுக்கீடு இடங்களில் மாணவ, மாணவியர் சேர, www.skilltraining.tn.gov.in
என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். வெல்டர், ஒயர்மேன், மெக்கானிக்,
பிளம்பர் போன்ற பிரிவுக்கு, 8 ம் வகுப்பிலும், எலக்ட்ரீஷியன்,
பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், கம்மியர் உள்ளிட்ட பல பிரிவுக்கு உரிய
கல்வி தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள், தங்களது
மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று, ஜாதி சான்று, மொபைல் எண், இ-மெயில்
ஐ.டி., - ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான சான்று,
பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் அந்தந்த ஐ.டி.ஐ.,க்களை நேரடியாக
அணுகலாம்.